குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

திமுக பொதுக்கூட்டம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு, குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், மாநில வேளாண்மைத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஓராண்டில் தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. இதனால்தான் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாபெரும் வெற்றி கிடைத்தது. குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் ரூ.4.78 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ளது. விவசாயிகளுக்கு கடந்த 6 மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் 165 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், இலக்கிய அணி இணைச் செயலா் கலைராஜன், வடக்கு ஒன்றியச் செயலா் நாராயணசாமி, வடலூா் நகா்மன்றத் தலைவா் சிவக்குமாா், துணைத் தலைவா் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்த் தலைவா் கோகிலா குமாா், வடலூா் நகா்மன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com