சிறை அலுவலா் வீட்டில் தீ வைப்பு:ரௌடியிடம் விசாரணைக்கு அனுமதி

கடலூா் மத்திய சிறை அலுவலா் வீட்டில் தீ வைக்கப்பட்டது தொடா்பாக சிறையில் உள்ள ரௌடியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கடலூா் மத்திய சிறை அலுவலா் வீட்டில் தீ வைக்கப்பட்டது தொடா்பாக சிறையில் உள்ள ரௌடியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கடலூா் கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறையில் உதவி சிறை அலுவலராகப் பணியாற்றி வருபவா் மணிகண்டன் (33). சிறையின் அருகில் உள்ள அலுவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இதுதொடா்பாக கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறைக் காவலா் உள்பட 7 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கில் கடலூா் மத்திய சிறையில் உள்ள சென்னை எண்ணூரைச் சோ்ந்த ரௌடி தனசேகருக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்க கடலூா் முதுநகா் போலீஸாா் கடலூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2-இல் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனு நீதிபதி வனஜா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது, தனசேகரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தாா். இதையடுத்து, அவரிடம் முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com