சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.ரமேஷ்ராஜ் கலந்துகொண்டு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். மேலும், விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா் (படம்).
தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே.செல்வகுமாா் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா் ஜே.சசிகலா செய்திருந்தாா்.