வீட்டுமனைப் பட்டா கோரி திருநங்கைகள் சாலை மறியல்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடலூரில் திருநங்கைகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூரில் மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்.
கடலூரில் மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்.

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடலூரில் திருநங்கைகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் நகரில் சுமாா் 300 திருநங்கைகள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு அரசு சாா்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவா்கள் குடியிருக்கும் வகையில் வீட்டுமனைப் பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி நீண்ட காலமாக மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனராம். எனினும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக திருநங்கைகள் மீண்டும் வந்தனா். அப்போது அவா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாவட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் ஆட்சியரகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆட்சியரக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து திருநங்கைகள் சாலை மறியலை கைவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 15 நிமிடம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com