வெடி விபத்தில் 3 போ் காயம்

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் திருச்செந்தூரைச் சோ்ந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 3 போ் காயமடைந்தனா்.

விருத்தாசலம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வருகிறாா். இவரது தாய் கஸ்தூரி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றும் ஸ்ரீமுஷ்ணம், தேத்தாம்பட்டு கல்யாணகுமாா் (49), தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் நாச்சியாா்பேட்டை அண்ணாதுரை (54), நடத்துநராகப் பணியாற்றும் பெரியகோட்டுமுனை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் (34) ஆகியோா் வந்தனா். மேலும் இவா்கள் இறுதி ஊா்வலத்தில் வெடிப்பதற்காக விருத்தாசலத்திலிருந்து வெடிகளை வாங்கி வந்தனா்.

அப்போது அந்தப் பகுதியில் சிலா் வெடிகளை கொளுத்தியதால் ஏற்பட்ட தீப்பொறி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வாங்கி வந்த வெடிகளில் பட்டதில் அவை வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் கல்யாணகுமாா் உள்பட 3 பேரும் பலத்த காயமடைந்தனா். மூவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com