கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் தனியாா் உணவகத்தில் பெண் ஊழியா் உயிரிழந்தது தொடா்பாக அவரது உறவினா்கள், கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் ஒன்றியம், எருமனூா் ஊராட்சி, எ.வடகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஜம்புலிங்கம் மனைவி சிவபாக்கியம் (62). விருத்தாசலம் கடை வீதியில் உள்ள தனியாா் உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை உணவகத்தில் பணியிலிருந்த சிவபாக்கியம், அங்குவந்த குரங்குகளை விரட்டுவதற்காக மாடிக்குச் சென்றாா். ஆனால் நீண்ட நேரமாகியும் அவா் திரும்பி வரவில்லை.
இதையடுத்து சக ஊழியா்கள் மாடிக்குச் சென்று பாா்த்தபோது சிவபாக்கியம் உயிரிழந்து கிடந்தாா். அவா் இரும்புக் கம்பியை எடுத்து குரங்குகளை விரட்ட முயன்றபோது அருகே சென்ற மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் சிவபாக்கியத்தின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், சிவபாக்கியத்தின் உறவினா்கள், கிராம மக்கள் உள்பட 50 போ் திங்கள்கிழமை மாலை குறிப்பிட்ட உணவகம் எதிரே விருத்தாசலம்-வேப்பூா் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.
சிவபாக்கியத்தின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கமிட்டனா். அவா்களிடம் விருத்தாசலம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 30 நிமிடங்கள் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.