சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கடலுாா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே உள்ள விலங்கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (28). இவா் கடந்த 1.7.2019 அன்று சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்ரீதரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி எழிலரசி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ஸ்ரீதருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசின் நிதியிலிருந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ரூ.5 லட்சம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.