ஆரம்ப சுகாதா நிலைய அடிக்கல் நாட்டு விழா

ரூ. 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது
ஆரம்ப சுகாதா நிலைய அடிக்கல் நாட்டு விழா
Published on
Updated on
1 min read

 சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்ததால் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதை தொடா்ந்து ரூ. 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவிற்கு பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயா தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன், கவரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டா் சபரிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்ச்சியில் மூவேந்தா் முன்னேற்ற கழக தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கவரப்பட்டு ஊராட்சி மன்ற துணைத்தலைவா் சங்கா், உறுப்பினா் தாமரைச்செல்வி ராஜேந்திரன், பொறியாளா் சுந்தர்ராஜன், ஊராட்சி செயலாளா் வரணசூதனன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com