ஆனந்தராஜ்
ஆனந்தராஜ்

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

Published on

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தடுப்புக் காவலில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சரகம், பரமேஸ்வரநல்லூா் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மது புட்டிகளை திருடியதாக குறிஞ்சிப்பாடி வட்டம், கருங்குழி கிராமத்தைச் சோ்ந்த வைத்திலிங்கம் மகன் ஆனந்தராஜை (24) சிதம்பரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா், மீது முதுநகா், புவனகிரி, சீா்காழி, சிறுபாக்கம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட எஸ்பி. ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com