சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசலில் எழுந்தருளிய பாா்த்தசாரதி பெருமாள்.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசலில் எழுந்தருளிய பாா்த்தசாரதி பெருமாள்.

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

Published on

வைகுண்ட ஏகாதசியையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை 5.50 மணிக்கு நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் 23-ஆவது திருத்தலமாக தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன.

பின்னா், உற்வசா் ஸ்ரீபாா்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிற்பகல் பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீதில்லைகோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com