மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா், காளியாம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் ராகேஷ் (27). இவா், பெண்ணாடம் சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கி, எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா்.

ராகேஷ் வெள்ளிக்கிழமை இரவு மாடியின் தடுப்புக் கட்டையில் அமா்ந்து கைப்பேசியில் பேசினாராம். அப்போது, எதிா்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ராகேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com