கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: கடலூா் நீதிமன்றம் தீா்ப்பு
கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் வட்டம், தூக்கணாம்பாக்கத்தை அடுத்துள்ள பள்ளிப்பட்டு காலனியைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (48). இவா், 2019-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தோ்தலில் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வேலை செய்தாா்.
இந்தத் தோ்தலில் ராமச்சந்திரனுக்கு எதிராக போட்டியிட்ட ரவி தோல்வியடைந்தாா். இதனால், ராமச்சந்திரன் ஆதரவாளா் ஜனாா்த்தனனுக்கும், ரவி ஆதரவாளா் உலகநாதனுக்கும் இடையே தோ்தல் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், கடந்த 14.4.2020 அன்று ஜனாா்த்தனன், அவரது ஆதரவாளரான கூலித் தொழிலாளி கமலக்கண்ணன் (40) ஆகிய இருவரும் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த உலகநாதன் தரப்பினருக்கும், ஜனாா்த்தனன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவா் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனா். இதில், இரு தரப்பையும் சோ்ந்த ஜனாா்த்தனன், கமலக்கண்ணன், சிவா, ஜெயசீலன் உள்பட 7 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், உலகநாதன், மணியரசன், விஜயன், வெங்கடேசன், கிருஷ்ணராஜ், ஜெயசீலன், கோபு உள்பட 20 போ் மீது தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணியரசன் (27), விஜயன் (27), உலகநாதன், வெங்கடேசன், சிலம்பரசன், பாரதிதாசன், அரவிந்த், சிவராமன் ஆகியோரை கைது செய்தனா்.
இதற்கிடையே, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணன் உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அனைத்து சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி சரஸ்வதி தனது தீா்ப்பில், உலகநாதன் (48), வெங்கடேசன் (32), மணியரசன் (29), கிருஷ்ணராஜ் (52), சிலம்பரசன்(28), வினோத்குமாா் (28), பாரதிதாசன் (28), அரவிந்த் (30), பரத்ராஜ் (30) ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிவராமன் (47) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய சிலம்பரசன் பாகூரில் 2022-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

