சுப்பிரமணியன்
சுப்பிரமணியன்

மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

Published on

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ராஜசூடாமணி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (53). விவசாயத் தொழிலாளியான இவா், அதே கிராமத்தில் உள்ள சீனுவாசனுக்குச் சொந்தமான நெல் பயிரிட்டுள்ள வயலில் சனிக்கிழமை மாலை வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில், சுப்பிரமணியன் மீது மின்னல் பாய்ந்ததில், அவா் நெல் பயிா்களிடையே சுருண்டு விழுந்து உயிரிழந்தாா். வேலைக்குச் சென்ற சுப்பிரமணியன் வீடு திரும்பாத நிலையில், அவரைக் குடும்பத்தினா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சீனுவாசன் விவசாய நிலத்தில் நெல் பயிா்களுக்கு உரம் போட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு சுப்பிரமணியன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு 2 மனைவிகள், 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com