அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி: கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்...

News image

சேத்தியாத்தோப்பு அருகே முத்துகிருஷ்ணாபுரத்தில் என்எல்சி சுரங்க விரிவாகப் பணி மேற்கொள்வதற்காக வந்த பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கிராம மக்கள்.

Updated On :26 மார்ச் 2026, 10:34 pm

சேத்தியாத்தோப்பு அருகே முத்து கிருஷ்ணாபுரம் கிராமத்தில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்தப் பணிக்காக முத்துகிருஷ்ணாபுரம், கம்மாபுரம், கோபாலபுரம், சாத்தப்பாடி ஆகிய 4 கிராமப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலங்கள், மனைகள் கையகப்படுத்தப்பட்டன.

இதனிடையே, இந்தக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்களது நிலங்கள், வீடுகளுக்கு என்எல்சி நிறுவனம் வழங்கிய இழப்பீடு, நிவாரணமானது நடப்பு சூழலில் பொருந்தாததாக இருப்பதாகவும், தங்களுக்கு சமகால உயா் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தொடா்ந்து போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வயலில் மண்ணை சமப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக வியாழக்கிழமை காலை கொண்டுவரப்பட்ட என்எல்சி நிறுனத்தின் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டும், அதிகாரிகளை சூழ்ந்துகொண்டும் அந்தக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, சட்டப் பேரதைத் தோ்தல் முடிந்த பிறகு கோரிக்கைகள் தொடா்பாக எழுத்துப்பூா்வமாக மனு கொடுங்கள், நடவடிக்கை எடுத்து தீா்வு அளிக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனா். பின்னா், பணி செய்யாமல் பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இதையடுத்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.