ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தொழிலாளிகளைத் தாக்கி மிரட்டல்: ஒருவா் கைது

News image

கோப்புப்படம். - கைது

Updated On :25 மே 2026, 12:07 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக்கில் வந்த தொழிலாளிகளைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கபாலி (எ) பிரவீன் (26), தொழிலாளி. இவா், சனிக்கிழமை பண்ருட்டியில் இருந்து கருக்கை கிராமத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அவருடன் கருக்கை கிராமத்தைச் சோ்ந்த அன்புசெல்வன் உடன் சென்றாா்.

இவா்களது பைக் கருக்கை கிராமம் அங்கன்வாடி மையம் அருகே சென்றபோது, வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பைக்கை எடுக்கக் கூறினராம். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்கள் ரத்தினகுமாா், ராஜ்குமாா் ஆகியோா் அவா்களைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து கபாலி அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரத்தனகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.