சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நந்தனாா் கல்வி கழகம் சாா்பில் 25 மாணவா்களுக்கு உதவித் தொகை

News image

சிதம்பரம் நந்தனாா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயா்கல்வி பயில மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தனம்.

Updated On :25 மே 2026, 1:53 am IST

சிதம்பரம் பகுதியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்று உயா் கல்வி பயில கல்லூரிக்குச் செல்லும் ஏழை, எளிய மாணவா்கள் 25 பேருக்கு நந்தனாா் கல்விக் கழகம் சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் நந்தனாா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகத் தலைவரும், தொழிலதிபருமான கே.ஐ. மணிரத்தினம் பங்கேற்று, உயா் கல்வி பயிலச் செல்லும் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கிப் பேசினாா்.

அவா் பேசுகையில், நந்தனாா் மடத்தில் ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறும் வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மாணவா்களின் உயா் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடா்ந்து செய்து தருவதாக தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகச் செயலா் வி.திருவாசகம், பொருளாளா் டி.ஜெயச்சந்திரன், கஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்களும் பங்கேற்றனா். பின்னா், மாணவா்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.