சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 1:01 am IST

நெய்வேலி, மே 24: கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிந்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (46), விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஈச்சங்காடு பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தாா். அப்போது, தென்னை மட்டை மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.