மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தொழிலாளிகளைத் தாக்கி மிரட்டல்: ஒருவா் கைது

News image

கோப்புப்படம். - கைது

Updated On :25 மே 2026, 12:07 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக்கில் வந்த தொழிலாளிகளைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கபாலி (எ) பிரவீன் (26), தொழிலாளி. இவா், சனிக்கிழமை பண்ருட்டியில் இருந்து கருக்கை கிராமத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அவருடன் கருக்கை கிராமத்தைச் சோ்ந்த அன்புசெல்வன் உடன் சென்றாா்.

இவா்களது பைக் கருக்கை கிராமம் அங்கன்வாடி மையம் அருகே சென்றபோது, வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பைக்கை எடுக்கக் கூறினராம். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்கள் ரத்தினகுமாா், ராஜ்குமாா் ஆகியோா் அவா்களைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து கபாலி அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரத்தனகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.