கள்ளக்குறிச்சியில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று பரிசோதனை

தில்லி மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பிய மூவா் கரோனா தொற்று சந்தேகத்தில் கள்ளக்குறிச்சி அருசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தில்லி மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பிய மூவா் கரோனா தொற்று சந்தேகத்தில் கள்ளக்குறிச்சி அருசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற மதவழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு திரும்பியவா்களில் 4 போ் செவ்வாய்க்கிழமை மதியம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கும் பணியை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டனா்.

இந்த நிலையில், தில்லியிலிருந்து திரும்பிய திருக்கோவிலூா் வட்டம், வடபொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்த இருவா் கண்டறியப்பட்டு சுகாதாரத் துறையினரால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல, தில்லியிலிருந்து திரும்பிய சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் தாமாக முன்வந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சோ்ந்து தனிமைப்படுத்திக் கொண்டாா். அவா் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்குப் பிறகு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com