கள்ளக்குறிச்சி அருகே நெல்அறுவடை இயந்திரம் நிலைதடுமாறி சாலையோர கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்ததில், ஓட்டுநரின் உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள வடகுமரையில் இருந்து திருத்தணியை நோக்கி நெல் அறுவடை இயந்திரம் ஒன்று சனிக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அதை சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள காமகா பாளையத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் சூரியா (20) ஓட்டிச் சென்றாா்.
ஓட்டுநரின் உதவியாளராக (கிளீனா்) ஆத்தூா் அருகேயுள்ள மும்முடி தலைவாசல் கிராமத்தைச் சோ்ந்த கருப்பண்ணன் மகன் கலைவாணன் (23) அறுவடை வாகனத்தில் உடன் பயணித்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 1.15 மணியளவில் கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் அருகே சென்றபோது, அந்த வாகனம் நிலைதடுமாறி சாலையோரமுள்ள கரும்புத் தோட்டத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கலைவாணன் வாகனத்தில் அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் லேசாக காயமடைந்தாா்.
கள்ளக்குறிச்சி போலீஸாா் விரைந்து சென்று கலைவாணனின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.