துப்புரவுப் பணியாளா்களுக்கு உதவி

கள்ளக்குறிச்சி நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு திமுகவினா் அரிசி, கிருமி நாசினி, முகக் கவசம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு திமுகவினா் அரிசி, கிருமி நாசினி, முகக் கவசம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.

நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளா்களுக்கு நகர திமுக சாா்பில் தலா 10 கிலோ அரிசி, கிருமி நாசினி, சோப்பு, முகக் கவசம், கையுறை, ரொக்கம் ரூ.200 உள்ளிட்டவற்றை பொன்.கெளதமசிகாமணி எம்.பி. வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலா் இரா.சுப்ராயலு, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் ஆ.அங்கையா்கண்ணி, சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், நகராட்சி ஆணையா் (பொ) அ.வெங்கடாசலம், துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com