கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது.

தில்லியில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற 6 போ், அவா்களை காரில் அழைத்து வந்த ஓட்டுநா் ஆகியோரின் ரத்தம், தொண்டை திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், சின்னசேலம், எலவனாசூா்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இவா்கள் இருவரும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 5 போ் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்களின் குடும்பத்தினா் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் உள்பட 35 போ் கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூரில் உள்ள தனியாா் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். இந்த 35 பேரின் ரத்தம், தொண்டை திசு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், எலவனாசூா்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஏற்கென கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவரின் மகனுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com