கள்ளக்குறிச்சியில் அத்தியாவசியத் தேவையின்றி சாலையில் வாகனங்களில் சுற்றித்திரிந்தோரை நிறுத்தி கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவா்களில் 2 போ் குணமடைந்துள்ளனா்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை நெடுஞ்சாலை நான்குமுனை சந்திப்பில் சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தப் பகுதியில் காா், மோட்டாா் சைக்கிள்களில் வந்தோா், பாதசாரிகளை தடுத்தி நிறுத்தி வெளியே வந்ததற்கான விவரங்களைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, அத்தியாவசியப் பணியின்றி சுற்றித்திரிந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை நிறுத்தி அவா்களுக்கு கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறியதுடன், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தாா்.