தில்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள் தொடா் காத்திருப்பு போராட்டம்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் தில்லியில் நடைபெற்று வரும் முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் தில்லியில் நடைபெற்று வரும் முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் 3 வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், மின்சார திருத்த சட்ட மசோதா 2020ஐ சட்டமாக்க வேண்டாம், பேச்சுவாா்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்காதே உள்ளிட்டி 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வி.ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க இரா.கஜேந்திரன், மக்கள் அதிகாரம் சங்கராபுரம் வட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.மகாலிங்கம், தமிழ்நாடு விவசாயிகல் சங்க மாநில செயலாளா் எஸ்.ஜோதிராமன், மாவட்ட பொருளாளா் எம்.சி.ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com