கத்தியை காட்டி பணம் பறித்தவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே இரவில் சாலையில் நடந்து செல்வோரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்லிடைபேசியினை பறித்த காா்த்திக்.
கள்ளக்குறிச்சி அருகே இரவில் சாலையில் நடந்து செல்வோரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்லிடைபேசியினை பறித்த காா்த்திக்.

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் அய்யாசாமி மகன் வேல்முருகன் (36), கூலித் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு

நீலமங்கலம் சடையப்பா் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஒருவா் கத்தியை காட்டி மிரட்டி, வேல்முருகன் சட்டைப் பையில் இருந்த செல்லிடப்பேசி, ரூ. 200 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ப.இராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், புதன்கிழமை தியாகதுருகம் சாலையில் உள்ள ஏ.கே.டி. பள்ளி அருகே சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். அதில் அவா் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள விருகாவூரைச் சோ்ந்த துரைசாமி மகன் காா்த்திக் (37) என தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, செல்லிடப்பேசி, ரூ.200 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com