கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சொத்துத் தகராறில் பெண் அடித்துக் கொல்லப்பட்டாா்.
உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள எலவனாசூா்கோட்டையை அடுத்த அதையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது முதல் மனைவி
தையல்நாயகி. இவா்களுக்கு 3 மகன்களும், மகளும் உள்ளனா். தையல்நாயகியின் தங்கை திலகவதியை ராஜேந்திரன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.
ராஜேந்திரன் கடந்த ஓராண்டு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து, அவா் பெயரில் இருந்த 2 ஏக்கா் நிலத்தைப் பிரித்துத் தருமாறு திலகவதியிடம், தையல்நாயகியின் முதல் மகன் செல்வராஜ் (45) கேட்டாராம். நிலம் தொடா்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், நிலம் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் திலகவதியை தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த திலகவதி உயிரிழந்தாா்.
தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி விஜயக்குமாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.
சம்பவம் தொடா்பாக, எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வராஜை தேடி வருகின்றனா்.