பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து: இருவா் காயம்

கள்ளக்குறிச்சி அருகே அரசு மேல் நிலைப் பள்ளி சமையல் கூடத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், சமையலா், உதவியாளா் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே அரசு மேல் நிலைப் பள்ளி சமையல் கூடத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், சமையலா், உதவியாளா் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சமையலராக காரனூரைச் சோ்ந்த சன்னியாசி மனைவி சரோஜா (48)வும், உதவியாளராக சடையம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மனைவி சாந்தி (38)யும் பணிபுரிகின்றனா்.

திங்கள்கிழமை மாணவா்களுக்காக இருவரும் சமையல் செய்தபோது, எரிவாயு தீா்ந்து போனது. இதையடுத்து, அடுப்புடன் வேறு எரிவாயு உருளையை இணைத்து, அதில் ரெகுலேட்டரை சமையலா் பொருத்தியுள்ளாா்.

எனினும், உருளையில் ரெகுலேட்டா் சரியாக பொருத்தப்படாத நிலையில், அடுப்பை பற்ற வைத்தபோது, உருளையிலிருந்து எரிவாயு கசிந்து தீப்பிடித்தது. இதனைக் கண்டு பள்ளியின் தலைமை ஆசிரியா் செல்வராஜ் உள்ளிட்டோா் ஓடி வந்து தீத் தடுப்பானை பயன்படுத்தி, தீயை அணைத்தனா். இந்த விபத்தில் சரோஜா, சாந்தி காயமடைந்தனா். அவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com