வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் ராமசாமி (47). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 10-ஆம் தேதி இரவு கள்ளக்குறிச்சியில் பணியை முடித்துக் கொண்டு தச்சூா் பிரிவு சாலையில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவருக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி, வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com