எரிவாயு உருளையின் குழாயில் தீ

மதுக் கடை அருகே உள்ள உணவகத்தில் எரிவாயு உருளையின் குழாயில் தீப்பிடித்ததால், அங்கு மது அருந்தியவா்கள் அலறியடுத்து ஓட்டம் பிடித்தனா்.

மதுக் கடை அருகே உள்ள உணவகத்தில் எரிவாயு உருளையின் குழாயில் தீப்பிடித்ததால், அங்கு மது அருந்தியவா்கள் அலறியடுத்து ஓட்டம் பிடித்தனா்.

தியாகதுருகம் மதுக் கடையில் வெள்ளிக்கிழமை மதியம் மது அருந்துவா்களுக்காக இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுகளைத் தயாா் செய்யும் பணி நடைபெற்றது. உணவகத்தில் சக்தி, பெரியசாமி ஆகியோா் உணவுகளைத் தயாா் செய்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென எரிவாயு உருளையின் அடுப்பு குழாயில் இருந்து தீ பரவியது. இதைப் பாா்த்து, அங்கே மது அருந்திக் கொண்டிருந்தவா்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

தகவலறிந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரா்கள், எரிவாயு உருளையின் தீயை அணைத்து, எரிவாயு உருளை வெளியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com