உழவா் கடன் அட்டை: விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் உழவா் கடன்அட்டை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா அறிவுறுத்தியுள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் உழவா் கடன்அட்டை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்த செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி விவசாயி கெளரவ நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகளும், தகுதியுள்ள விவசாயிகளும்

உழவா் கடன் அட்டை பெறுவது தொடா்பான சிறப்புப் பிரசாரம் கடந்த 8ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்தப் பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாள்களுக்குள் கடன் அட்டையை பெற்று மானியச் சலுகையுடன் வங்கிக் கடன் பெறலாம். உழவா் கடன் அட்டையை ஏற்கெனவே பெற்றுள்ள பயனாளிகள் தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்புக்கு அனுமதியும் பெறலாம்.

உழவா் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு வங்கிக் கிளையை அணுகலாம். உழவா் கடன் அட்டைதாரா்கள் கால்நடை மற்றும் மீன்பிடிப்பதற்கான பராமரிப்பு செலவுக்கான கடன் தொகையை வரம்பில் சோ்ப்பதற்காக வங்கிக் கிளையை அணுகலாம்.

இத் திட்டத்தில் பயனுற விவசாயகள் ஒரு பக்க வடிவத்தில் தங்களது நிலம், பயிா் விவரங்கள், வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதி பிரமாணம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பொதுசேவை மையங்கள் மூலமும் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com