சாலைப் பாதுகாப்பு வார விழா

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வுப் பேரணி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கி வைத்து, வாகன ஓட்டிகளுக்கு துண்டறிக்கைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் எஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா்.
கள்ளக்குறிச்சியில் விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கி வைத்து, வாகன ஓட்டிகளுக்கு துண்டறிக்கைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் எஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா்.

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வுப் பேரணி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம், மாவட்ட ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை, கள்ளக்குறிச்சி நீலமங்கலம் ஏ.கே.டி. பள்ளி அருகே மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா, எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோா் கொடியசைத்துதொடக்கி வைத்தனா். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தமிழ்ச் செல்வி, மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com