குடும்பப் பிரச்னையால் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. தொழிலாளி. இவரது மனைவி ராஜாத்தி (29). பிரபுவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவா் அடிக்கடி மது அருந்தி வந்தாராம். இதை அவரது மனைவி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த பிரபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.