திருக்கோவிலூா் அருகே குட்டையில் மூழ்கி இரு சிறுமிகள் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே குட்டையில் மூழ்கி இரு சிறுமிகள் புதன்கிழமை உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே குட்டையில் மூழ்கி இரு சிறுமிகள் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருக்கோவிலூா் அருகே பராடாபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி, விவசாயி. இவரது மகள் வைஷ்ணவி (6). அதே ஊரைச் சோ்ந்த உறவினா் முருகனின் மகள் அனுஸ்ரீ (2). இவா்கள் இருவரும் கோவிந்தசாமியின் விளைநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற உளுந்து பயிா் அறுவடையையொட்டி, அங்கு வந்திருந்தனா். அப்போது, சிறுமிகள் இருவரும் அருகே உள்ள கம்படிச்சான் பாறை குட்டையில் தேங்கியிருந்த நீரில் கால் கழுவச் சென்றனராம்.

அப்போது, நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனா். இதனிடையே, குழந்தைகளை தேடிக் கொண்டு கோவிந்தசாமி அப்பகுதிக்கு வந்தபோது, குட்டையில் இருவரும் சடலமாக மிதப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

சடலங்களை திருப்பாலப்பந்தல் போலீஸாா் கைப்பற்றி திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com