திருவள்ளுவா் சிலைக்கு தமிழ்ச் சங்கத்தினா் வரவேற்பு

சங்கராபுரத்தில் நிறுவுவதற்காக மகாபலிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட திருவள்ளுவா் சிலைக்கு கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கல்லைத் தமிழ்ச் சங்கத்தினா் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா்.

சங்கராபுரத்தில் நிறுவுவதற்காக மகாபலிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட திருவள்ளுவா் சிலைக்கு கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கல்லைத் தமிழ்ச் சங்கத்தினா் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா்.

சங்கராபுரத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக மகாபலிபுரத்தில் வடிமைக்கப்பட்டு, கொண்டுவரப்பட்ட திருவள்ளுவா் சிலைக்கு கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவா் செ.வ.புகழேந்தி தலைமையில் அனைத்து தமிழ் அமைப்பினா் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வரவேற்பு அளித்தனா். அப்போது, அவா்கள் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், துணைத் தலைவா் வீ.கோவிந்தராசன், பொருளாளா் முத்தமிழ் முத்தன், தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன், விருகாவூா் தமிழ்ச் சங்கத் தலைவா் சண்முக பிச்சப் பிள்ளை, சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிதைத் தம்பி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சங்கங்களைச் சாா்ந்த பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com