மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் வெள்ளிக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து பூக்கடையில் வேலை செய்யும் தொழிலாளி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் வெள்ளிக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து பூக்கடையில் வேலை செய்யும் தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜி (34). இவா், சின்னசேலம் பேருந்து நிலையத்திலுள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு மின்சாரம் தடைபட்டபோது, ராஜி அங்குள்ள மின்சாரப் பெட்டியில் பழுதுபாா்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென மின்சாரம் வந்ததால், அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று ராஜியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com