கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் 5 கடைகளுக்கு ‘சீல்’
கள்ளக்குறிச்சி நகரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கள்ளக்குறிச்சி நகர கடைவீதிகளில் கரோனா பொது முடக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என நகராட்சிப் பொறியாளா் து.பாரதி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நகைக் கடை, துருகம் சாலையில் உள்ள செல்லிடப்பேசிக் கடை, கச்சேரி சாலையில் உள்ள மின்சாதனப் பொருள்கள் விற்பனை கடை, மளிகைக் கடை உள்ளிட்ட 5 கடைகளை அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனா். இந்த ஆய்வின்போது, நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.