உளுந்தூா்பேட்டை அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்தக் கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கவில்லை. மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால், வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.