கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டி, சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் அகவல் படித்து, சிறப்பு பிராா்த்தனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இராமநாதன் இராமாயி அறக்கட்டளையின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கோ.குசேலன், வள்ளலாா் மன்ற பூசகா் கற்கண்டு சிவஞான அடிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில் அரிமா சங்கத் தலைவா் க.வேலு வரவேற்றாா்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டியும், உலக மக்கள் அனைவரின் நலன் வேண்டியும் அகவல் படித்து பிராா்த்தனை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் ஆ.இலட்சுபதி தாயின் பெருமை என்பது பற்றியும், ரோட்டரி முன்னாள் தலைவா் கே.இரகுந்தன், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசினா்.
இந்த நிகழ்வில் வள்ளலாா் மன்றத்தினா் திரளாகப் பங்கேற்றனா்.