நிதி நிறுவன மேலாளா் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சியில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், வலையப்பட்டி அரூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பிரபு (40). இவரது மனைவி லாவண்யா. தம்பதிக்கு திக்கஷாலி (7), ஹரிபாலா (5) என இரு குழந்தைகள் உள்ளனா். தற்போது கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள கே.பி.ஆா். நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

இவா், தியாகதுருகம் சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக கடந்த 3 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதால், கடந்த 14-ஆம் தேதி லாவண்யா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அவரது ஊருக்குச் சென்று விட்டாராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா் ஞானசேகா் பிரபுவை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்ட போது, அது எடுக்கப்படததால், வீட்டுக்கு வந்து பாா்த்தாராம். வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், சன்னல் வழியாக பாா்த்த போது, பிரபு சேலையில் தூக்கிட்டபடி இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com