புலம் பெயா் தொழிலாளா்களை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தீவிரப்படுத்தியுள்ளாா்.
கரோனா தொற்று சந்தேகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,434 போ் தொடா் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்டுள்ளனா். 24 போ் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா். 6 பேரின் ரத்த மாதிரிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், 5 பேருக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
இது போல கேரளம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்த சுமாா் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.