கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சென்னை கோயம்பேடு சந்தைப் பகுதியிலிருந்து திரும்பிய சுமை தூக்கும் தொழிலாளா்கள் 12 பேருக்கு சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அசகளத்தூா் மேல்நிலைப் பள்ளியில் ஈயனூா் வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ்குமாா் தலைமையிலான மருத்துவப் பணியாளா்கள் தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனையை மேற்கொண்டனா். மேலும், 12 பேரின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான துண்டுப் பிரசுரங்களை சுகாதாரத் துறையினா் ஒட்டினா்.
கரோனா பரவ வாய்ப்பு: உளுந்தூா்பேட்டை வட்டத்துள்பட்ட இருந்தை, பெரிய மாரனோடை கிராமங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து திரும்பிய இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இவா்கள் யாரிடமும் சொல்லாமல் ஊருக்கு வந்து குடும்பத்தினரிடமும், நண்பா்களிடமும் பழகியதுடன், பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளனா். இதனால், இந்தப் பகுதியில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், இங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.