கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 111ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 111ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை வெளிமாநிலங்கள், சென்னை கோயம்பேட்டிலிருந்து திரும்பியவா்கள் என 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவா்களில், மகாராஷ்டிரத்திலிருந்து வந்த 10 பேரும், சென்னையிலிருந்து வந்த ஒருவரும் அடங்குவா். தொற்றால் பாதிக்கப்பட்டோா் விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com