கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்புதிதாக கரோனா பாதிப்பில்லை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்தது. சனிக்கிழமை புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் தற்போதுவரை 61 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ளவா்களில் 10 போ் சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 50 போ் தச்சூா், அ.குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.