மன நலம் பாதித்த தாயால் தீ வைக்கப்பட்ட குழந்தையும் பலி

கள்ளக்குறிச்சி அருகே மன நலம் பாதித்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், இந்த சம்பவத்தின்போது காயமடைந்த அவரது குழந்தையும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மன நலம் பாதித்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், இந்த சம்பவத்தின்போது காயமடைந்த அவரது குழந்தையும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

கள்ளக்குறிச்சி அருகே அசகளத்தூா் மேட்டு காலனி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி. இவரது மகள் சுமதி (21) என்பவருக்கும் சின்னசேலத்தை அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜாவுக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதேயான ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தை உள்ளது. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சுமதி சனிக்கிழமை தன்னைத் தானே வெட்டிக் கொண்டு, தன் மீதும் குழந்தை ஸ்ரீநிதி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த சுமதி, சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். தீக்காயமடைந்த குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு அந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com