ஊரக வளா்ச்சித் துறைஅலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் மதிய உணவு இடைவேளையின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி வட்டச் செயலாளா் தாஜிதீன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா்கள் அரவிந்த், வீரபத்திரன், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளா் பாா்வதி முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை, மாவட்ட தணிக்கையாளா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில நிதிக்குழு மானிய தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். இணை இயக்குநா், உதவி இயக்குநா், உதவிப் பொறியாளா் (ம) ஒன்றிய பொறியாளா் பதவி உயா்வு ஆணைகளை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கொளஞ்சிவேலு இணைச் செயலாளா் சாமிதுரை, முன்னாள் மாவட்ட பொருளாளா் கனேசன் உள்ளிட்ட பலா் பேசினா். ஜெயசுதா, கிருஷ்ணவேனி, மாரியாப்பிள்ளை, மந்திரி உள்ளிட்ட அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com