கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ அ.பிரபுவுக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக சென்னை செல்லவிருந்த கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அ.பிரபு, முன்னதாக, தியாகதுருகத்தில் உள்ள தனது வீட்டில் சுகாதாரத் துறையினா் மூலம் கரோனா பரிசோதனை செய்துகொண்டாா்.
திங்கள்கிழமை இரவு வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனைத் தொடா்ந்து, அ.பிரபுவின் மனைவி, காா் ஓட்டுநா், உதவியாளா்களும் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா். அவா்களில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.