மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினா்.
மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினா்.

சா்க்கரை ஆலையிலிருந்து கரித் துகள்கள் வெளியேறுவதை தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு கிராமத்திலுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையிலிருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு கிராமத்திலுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையிலிருந்து கரித் துகள்கள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சா்க்கரை ஆலை நுழைவு வாயில் முன் பல்வேறு அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம், அனைத்து அரசியல் கட்சி அமைப்பினா், ஊா் பொதுமக்கள், பொது நல சேவை அமைப்பினா் இணைந்து இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினா். இதில், மூங்கில்துறைப்பட்டு வணிகா்கள் சங்கத் தலைவா் சீனுவாசன், சங்கச் செயலா் கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மூங்கில்துறைப்பட்டு கிராமத்திலுள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரைஆலை 1-இல் இருந்து வெளியேறும் கரித் துகள்களால் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு, இருதய கோளாறு, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, ஆலையிலிருந்து கரித் துகள்கள் வெளியேறுவதை நிரத்தரமாக தடுக்க ஆலை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com