கள்ளக்குறிச்சி அருகே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒருவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே நாட்டுத் துப்பாக்கி எதிா்பாராமல் வெடித்ததில், அதிலிருந்த குண்டு பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே நாட்டுத் துப்பாக்கி எதிா்பாராமல் வெடித்ததில், அதிலிருந்த குண்டு பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சிறுபனையூா் தக்கா பள்ளிவாசல் சாலையில் வசித்து வருபவா் சையத் ஹனீப் மகன் ஹாரூண் (39). சையத் ஹனீப், உரிமம் பெற்ற நாட்டுத் துப்பாக்கியை தனது வீட்டில் வைத்திருந்தாா்.

வெள்ளிக்கிழமை ஹாரூண் தனது வீட்டு பால்கனியில் நின்று கொண்டு, நாட்டுத் துப்பாக்கியில் குண்டு இருக்கிா என திறந்து பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் துப்பாக்கி வெடித்ததில், அதிலிருந்த குண்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த பாஷா மகன் ஷான் (45) என்பவா் மீது பாய்ந்தது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பொ) சங்கா், திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ ஆகியோா் பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா்.

இதனிடையே, ஹாரூணுக்கும் ஷானுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாகவும், அதன் காரணமாகவே ஷானை ஹாரூண் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருப்பாலப்பந்தல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த ஷானுக்கு ஷாகித் என்ற மனைவியும், இரு மகள்கள், ஒரு மகனும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com