கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அகரகோட்டாலம் கிராமத்தில், அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், விழாக் குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
அகரகோட்டாலம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாா் கோயில் விழாவையொட்டி, கோயில் வளாகம் முன் அனுமதி பெறாமல் வெள்ளிக்கிழமை விழாக் குழுத் தலைவா் மணிகண்டன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பாா்த்த போது, அந்த இடத்தில் யாரும் இல்லை. எனினும், இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் பெரிய தமிழன் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.