கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து 5 பவுன் நகைகள், பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சி அருகே மேலூா் வடக்கு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (54), விவசாயி. சனிக்கிழமை இரவு இவரும், அவரது மனைவி ராணியும் வீட்டை தாழ்ப்பாளிட்டு, மொட்டை மாடியில் தூங்கினா். காலையில் எழுந்து பாா்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் திருடுபோயிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ஜெ.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரித்தனா்.